கமலா தாஸின் படைப்புகளைக் கொண்டாடும் முகமாக கூகுள் அவரது உருவச் சித்திரத்தை நேற்று தனது தேடுபொறியின் முகப்பாக வெளியிட்டிருந்தது. ‘ என் கதை’ என்ற அவரது தன் வரலாற்று நூல் வெளிவந்த தினம் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. நண்பர் நிர்மால்யாவின் தமிழாக்கத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த ‘என் கதை’ க்கு எழுதப்பட்ட முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.
உங்களுடையதுஅல்லாதசுகங்கள்எனக்குஇல்லை
உங்களுக்குத்தெரியாதவேதனைகள்எனக்குஇல்லை
நானும்
’நான்’ என்றபெயரால்
அறியப்படுகிறேன்.
- கமலா தாஸ்
மிகைச்சொற்களில்விருப்பமில்லை; நம்பிக்கையுமில்லை. எனினும்இந்தமுன்னுரைக்கானவரிகளைஎழுதும்போதுஉணர்ச்சிமேலிடுவதைத்தடைசெய்யமுடியவில்லை. 'என்கதை'க்கு முன்னுரைஎழுதவாய்த்ததுபாக்கியம்என்றுநினைப்பதைத்தவிர்க்கமுடியவில்லை. ஒருவகையில்இதுமுன்னுரைஅல்ல; நன்றிபாராட்டல். மாதவிக்குட்டிக்குஅல்லதுகமலாதாஸுக்குஇரண்டுகாரியங்களுக்காகமறைமுகமாகக்கடன்பட்டிருக்கிறேன்; மொழிசார்ந்தும்பார்வைசார்ந்தும்.
முதலாவதுஅவருடையஎளிமையும்சரளமுமானமொழிக்காக. அவர்பயன்படுத்தியமலையாளமும்ஆங்கிலமும்மிகக்குறைவானசொற்களைக்கொண்டிருந்தவை.பரந்தசொற்களஞ்சியம்கைவசமில்லாத தொடக்கநிலைவாசகனான அன்றையஎனக்குஅவரதுமொழிஇடைஞ்சலில்லாதவாசிப்புக்குத்துணையாக இருந்தது. மலையாளம்நான்சுயமுயற்சியில்கற்றமொழி. அதில்சந்தேகம்எழுமானால்பிறசகாயம்தேடவேண்டும். பள்ளிப்பாடத்துக்குஅப்பாற்பட்டஆங்கிலச்சொற்களுக்குஅகராதியைநாடவேண்டும். இவைவாசிப்பின்வேகத்துக்கும்சுவாரசியத்துக்கும்முட்டுக்கட்டையாகஇருந்தன. இந்தஇடையூறுகள்இல்லாமல்வாசிக்கக்கூடியஎழுத்தாளர்களில்ஒருவராகஇருந்தார்மாதவிக்குட்டியும்கமலாதாஸும். வைக்கம்முகம்மதுபஷீரின்எளியமலையாளத்தைப்போலநீரோட்டம்நிரம்பியதாகஇருந்ததுமாதவிக்குட்டியின்எழுத்து. ஆர்.கே.நாராயணின் 'ஆடம்பரஎளிமை'தொனிக்கும்ஆங்கிலத்தை விடஎளிமைகொண்டவையாகத்தோன்றின கமலாதாஸின்கவிதைகளும்அன்றுஅவர்அபூர்வமாகஆங்கிலத்தில்எழுதியகதைகளும். அவைமுழுமையாகப்புரிந்தன.‘பட்சியின்மணம்'என்றமாதவிக்குட்டியின்முதலாவது தொகுப்பி லிருந்த கதைகளைசிரமமில்லாமல்வாசித்துப்புரிந்துகொள்ளமுடிந்தது. அதே சமயத்தில்அவரே மொழிபெயர்த்தோஅல்லதுஆங்கிலத்திலேயேஎழுதியோ 'இல்லஸ்டிரேட்டட்வீக்லி'யில்வெளியாகியிருந்த 'எடால்ஃபார்தசைல்ட்ப்ராஸ்டிட்டியூட்' ( A Doll for the Child Prostitute ) என்றகதையைஅகராதியின்துணையில்லாமல் ஒரேமூச்சில்படிக்கமுடிந்தது. புரிந்துகொள்ளவும்முடிந்தது. வாசிப்பில்நிறைவையும்நம்பிக்கையையும்அளித்தசந்தர்ப்பங்களாகஅவைஇருந்தன. பிற்காலத்தியவிரைவானவாசிப்புக்குஆரம்பப்பயிற்சிகளாகவும் இருந்தன.
மாதவிக்குட்டியின்மலையாளமும்கமலாதாஸின்ஆங்கிலமும் குறைந்தசொற்களால்ஆனவை. அந்தக்கையளவுசொற்கள்மூலமேதனதுஉலகைமுழுவதுமாகவெளிப்படுத்தமுடிந்ததுஎன்பதில்தான்அவரதுமேதைமைதுலங்கியது. வார்த்தைகள்குறைவுஎன்பதால்கூறியதுகூறல்என்றஇலக்கியப்பிழைஒருபோதும்நிகழ்ந்திராத மொழிநடையைஉருவாக்கிக்கொண்டார். ஒருசொல்லைத்திரும்பச்சொல்லநேர்ந்தால்அதைக்கவிதையின்ஒத்திசைவுடன்பயன்படுத்தினார். 'நான்மலையாளத்தையோ ஆங்கிலத்தையோஇலக்கண சுத்தமாகக்கற்றவள்அல்ல. அதனால்என்களஞ்சியத்தில்சொற்கள்குறைவு. எனவேஅவற்றைமிகஎச்சரிக்கையுடன்பயன்படுத்தினேன்; உலோபிநாணயங்களைச்செலவிடுவதுபோன்றஉணர்வுடன்'என்றுபிற்கால நேர்காணல்ஒன்றில்குறிப்பிட்டார். காலப்போக்கில் மிகப்பெரும்சொற்களஞ்சியத்துக்குஉடைமை யாளரானார்என்பதற்குப் பின்னாளில்இருமொழிகளிலும்அவர்முன்வைத்தபடைப்புகளேசான்று.
தீவிரமானபடைப்புகளைவாசகசௌக்கியத்துடன் வெளிப்படுத்தியவர்என்பதேமாதவிக்குட்டியைஅல்லதுகமலாதாஸைஇன்றும்வாசிப்புக்குரியஎழுத்தாளராகநிலைநிறுத்துகிறது. ஆரம்பகாலத்தில் எனக்குக்கிடைத்தஇந்தவாசகமதிப்புக்காகஅவருக்குநன்றிக்கடன்பட்டிருக்கிறேன். அதுதான்பின்னர்விரிவும்ஆழமுமானவாசிப்பனுபவங்களுக்குஇட்டுச்சென்றதுஎன்பதை நினைவுகூர்கிறேன்.
வாசகன்என்றநிலையில்மட்டுமல்ல; எழுத்தாளன்என்றநிலையிலும்அவரிடமிருந்துகற்றுக்கொள்ளவிஷயங்கள்இருந்தன. மொழியைக்கச்சிதமாகவும்செறிவாகவும்கையாளுவதுஎப்படிஎன்பதைச் சொல்லிக்கொடுத்தமறைமுகஆசிரியர்கள் பலரில்அவரும்ஒருவர். மொழிசார்ந்துஅவரிடமிருந்துபயின்றபாடங்கள்இவை. இவற்றைவிடவும்பார்வைசார்ந்துஅவரதுஎழுத்தின்மூலம்பெற்றபாதிப்பையேமுதன்மையானதாகக்கருதுகிறேன்.
என்இளையசகோதரனுக்கும்எனக்கும்ஏறத்தாழஇருபதுவயதுஇடைவெளி. தனதுநாற்பதையொட்டியவயதில்அம்மாஅவனைப்பெற்றெடுத்தார். நான்அன்றுவிவரமானகல்லூரிமாணவன். வாழ்வின்ரகசியங்களைஇலக்கியம்வாயிலாகப்புரிந்துகொண்டிருந்தவன். அந்தப்பேறுகாலத்தில்அம்மாவைப்பார்க்கவேவிரும்பவில்லை. உப்பியவயிறும்அசந்தர்ப்பமானமுதுமைக்குக்கட்டியக்கூறும்சோர்வுமாகஇருந்தஜீவனைப்பார்ப்பதேஅருவெறுப்பையும்கூச்சத்தையும்கொடுத்தது. மகப்பேறுமருத்துவமனையில்நான்தான்பிறந்தகுழந்தையைமுதலில்பார்த்தேன். அப்புறம்தான்அப்பாவேதன்கடைசிவாரிசைப்பார்த்தார். எனினும்வீடுதிரும்பியபின்னர்அம்மாவுடன்பேசவோஅவரைப்பார்க்கவோபிடிக்கவில்லை. மனம்குமட்டிக்கொண்டிருந்தது. அந்தக்குமட்டல்ஓராண்டுவரை நீடித்தது. என்பாராமுகம்பற்றிவீட்டுக்குவந்தஎவரிடமோஅம்மாகுரல்இடறக்குறைப்பட்டுக்கொண்டிருந்ததைத்தற்செயலாகக்கேட்டபின்னரேகுமட்டல்மட்டுப்பட்டது. அம்மாவிடம்ஓரிருவார்த்தைகளில்பேசஆரம்பித்தேன். அம்மாவுக்கும்எனக்கும்நடுவிலிருந்த பள்ளத்தில்அப்போதுவாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தின்சிலவரிகள்விழுந்துமேடுறுத்திச்சமப்படுத்தின. மலையாளவாரஇதழில்தொடராகவெளிவந்து பக்கங்களைக்கிழித்துச்சேகரித்துவைத்திருந்த, ஒன்றுக்கும்மேற்பட்டமுறைவாசித்திருந்தபடைப்பின்இரண்டாம்பதிப்புஅது.
'எனக்குஅலறுவதற்குக்கூடசமயம்கிடைக்கவில்லை. சூரியனைநினைத்துக்கொண்டுபடுத்திருக்கும்போதுஎன்னுடையஇடதுதொடையைஉரசிக்கொண்டுஎன்மூன்றாவதுமகன்பிறந்தான். அவன்உரக்கஅழுதான்'என்பவைஅந்தவரிகள்.
முந்தையவாசிப்புகளில்எந்தச்சலனமும்இல்லாமல்கடந்துபோனஅந்தவரிகள்இப்போதுவேறாகப்பொருள்தந்தன. அந்தவரிகளை மிகுந்தநடுக்கத்துடனும்பதற்றத்துடனும்குற்றஉணர்வுடனும்நினைவுகூர்ந்தேன். மூன்றுசகோதரிகளுடன்பிறந்தும்அதிகமும் பெண்களின்தோழமையில்வளர்ந்தும்புலப்படாதபெண்ணின் மர்மத்தைஅந்தவரிகள்விளக்கின. அந்தவரிகளின் வெம்மையைஉதிரத்தில்உணர்ந்தபடிஅம்மாவிடம்போனேன். ஓராண்டுக்குப்பின்புஎப்போதும்செல்லமாகஅழைப்பதுபோலஅம்மாவின்பெயரைச்சொல்லிக்கூப்பிட்டேன். குழப்பச்சிரிப்புடன்அம்மாஎன்னைநிமிர்ந்துபார்த்தார்.
சிலஆண்டுகளுக்குப்பிறகுதொலைக்காட்சியில்பணியாற்றிக்கொண்டிருந்தபோதுமாதவிக்குட்டியைகொச்சியிlllல்அவரதுஇல்லத்தில்சந்திக்கும்வாய்ப்புக்கிடைத்தது. சகஊழியர்பென்ஸிநாங்கள்பணிபுரியும்தொலைக்காட்சிக்காகமாதவிக்குட்டியைப் பற்றி ஓர்ஆவணப்படத்தைஎடுத்தார். அதையொட்டிஅந்தச்சந்திப்புநிகழ்ந்தது. மேதைமையையும்கிறுக்குத்தனத்தையும் குழந்தைமை யையும்தாய்மையையும்ஒரேஉருவில்கண்டநாள்அது. பலமணிநேரம்நீண்டிருந்தசந்திப்பில், தயக்கங்கள்மறைந்துபோயிருந்ததருணத்தில்'என்கதை'வரிகள்என்னைஅலைக்கழித்தவிதத்தைஅவரிடம்சொன்னேன். அன்றுஅவர்கமலாசுரய்யா ஆகியிருந்தார். பர்தாமுகப்பைச்சரிசெய்தபடிக்கேட்டுக்கொண்டிருந்தவர்எதிர்இருக்கையில்உட்கார்ந்திருந்தஎன்னைஅருகில்வரும்படிசைகைசெய்தார். சென்றதும்என்இருகைகளையும்பற்றிதனதுஇருகைகளுக்குள்பொத்திவைத்துக்கொண்டார்.'நம்மள்எல்லாரும்மாலாகமாருதன்னே,செலப்போசெகுத்தான்மாராகுன்னு'என்றார். அதைச்சொல்லும்போதுகைகளுக்குள் அதிர்வைஉணர்ந்தேன். அதுஎவர்கரங்களின்அதிர்வுஎன்றுஅப்போதுதெரியவில்லை. இந்தவரிகளைஎழுதும்போதும்அதேஅதிர்வைஉணரமுடிகிறது. இப்போதுஅது எவர்கரங்கள்ஏற்படுத்தியஅதிர்வுஎன்பதைஉணரமுடிகிறது. பெண்ணின்சூக்குமஉலகைஅறிமுகப்படுத்தியஆளுமைதந்தஅதிர்வு என்று இனங்காணமுடிகிறது.
இந்தஅனுபவத்தின் விளைவாகஇன்னொன்றையும்சொல்லலாம். இலக்கியம்கற்பிக்கும்பாடம்வெளிப்படையானதோ, பருண்மையானதோஅல்ல; மறை முகமும்நுட்பமுமானது. அப்படிஒருபாடத்தைஎனக்குக்கற்பித்தநூல்களில்ஒன்று'என்கதை'.
மாதவிக்குட்டிஅல்லதுகமலாதாஸின்இலக்கியவாழ்க்கையை'என்கதை'வெளியீட்டையொட்டிஇரண்டாகப்பிரிக்கலாம். அவர்எழுதியஇருமொழிகளிலுமே இந்தப்பிரிவினைநேர்ந்திருக்கிறது. 'என்கதை'க்குமுன்னர்அவர்அந்தந்தமொழிகளில்முக்கியமானஎழுத்தாளராகக்கருதப்பட்டார். தன்வரலாற்றுநூலுக்குப் பிறகு பிரபலரானார்.
நவீனமலையாளச்சிறுகதையில்மாதவிக்குட்டிமுக்கியமானஆளுமை. தகழிசிவசங்கரப்பிள்ளை, பொன்குன்னம்வர்க்கி, வைக்கம்முகம்மதுபஷீர், பி.கேசவதேவ், லலிதாம்பிகாஅந்தர்ஜனம்ஆகியமறுமலர்ச்சிஎழுத்தாளர்களின்காலகட்டத்துக்குப்பின்னர்வந்ததன்னுணர்வுக்கதையாளர்களானஎம்.டி. வாசுதேவன்நாயர், டி.பத்மநாபன்போன்றவர்களுக்குநிகரானஆளுமையாகமதிக்கப்பட்டவர்மாதவிக்குட்டி. எழுத்துவாழ்க்கையின் ஆரம்பக்காலத்தில்எழுதியசிலகதைகளிலேயேதனித்துவத்தைவெளிப்படுத்தினார். இரண்டுஆண்டுகளுக்குஒன்றுஎன்றவரிசையில்மூன்றுசிறுகதைத்தொகுப்புகள்வெளியாயின. ஒன்றுக்கு ( தணுப்பு) கேரளசாகித்தியஅக்காதெமிவிருதும்அளிக்கப்பட்டது. மலையாள இதழ்களில்அவரதுகதைகள்தொடர்ந்துவெளி வந்துகொண்டிருந்தன.
ஏறத்தாழஇதேகாலஅளவில்கமலாதாஸாகஆங்கிலக் கவிதைகளும்எழுதினார். இந்தியஆங்கிலக்கவிதையில்அன்றுபுகழ்பெற்றிருந்தநிஸிம்எசக்கியேல், ஏ.கே.ராமானுஜன், அடில்ஜெஸ்ஸவாலா, கேகிதாருவாலா, ஜீவ்பட்டேல், பிரித்தீஷ்நந்தி, அரவிந்த்கிருஷ்ணமெஹ்ரோத்ராமுதலானவர்களுடன்முக்கியக்கவிஞராகக்கவனம்பெற்றிருந்தார். இரண்டுதொகுப்புகளுக்குசர்வதேசப்பரிசுகளும்வழங்கப்பட்டிருந்தன. கமலாதாஸ்இடம்பெறாத இந்தியஆங்கிலக்கவிதைத்தொகுப்புகளேஇல்லை. இல்லஸ்டிரேட்டட்வீக்லிக்கும் அன்றுவெளிவந்துநின்றுபோனயூத்டைம்ஸ் மாதஇதழுக்கும்கவிதைப்பகுதிஆசிரியராகப்பங்களிப்புச்செய்துவந்தார்.
இவையெல்லாம்மாதவிக்குட்டிஅல்லதுகமலாதாஸைமுக்கியஇலக்கியஆளுமையாகக்காட்டின. மலையாளத்திலும்ஆங்கிலத்திலும்அவருக்குக்கணிசமானவாசகர்கள்இருந்தனர். 'என்கதை'சுயசரிதைஎழுதப்பட்டபின்புஇருமொழிகளிலும்வாசகர்எண்ணிக்கைவிரிவடைந்தது. எழுதியவரும்முக்கியமானஇலக்கியவாதிஎன்றநிலையிலிருந்துபிரபலஇலக்கியவாதியாகஆனார்.
'என்கதை'யைமாதவிக்குட்டிமுதலில்மலையாளத்தில்தான்எழுதினார். அன்றுவெளிவந்துகொண்டிருந்த'மலையாளநாடு'வாரஇதழில்தொடராகவெளி வந்தது. சுயசரிதையின்அறிமுகஅத்தியாயம்'ஒருகுருவியின்அவலம்'வெளி வந்த 1972ஆம்ஆண்டின்'மலையாளநாடு - ஓணப்பதிப்பு'சூடப்பம்போலவிற்றுத்தீர்ந்துமறுஅச்சுசெய்யப்பட்டது. தொடர்வெளிவந்துகொண்டிருந்தகாலத்தில்இதழின்விற்பனைஐம்பதாயிரம்பிரதிகள்கூடுதலாக உயர்ந்தது. மாதவிக்குட்டிபிரபலஎழுத்தாளராகஅறியப்பட்டார். அதுவரைசீரியஇலக்கியவாசகர்களின்கவனத்துக்குமட்டுமேஉரியவராகஇருந்தவர்வெகுஜனவாசகவட்டத்திலும்தொடர்ந்துவிவாதிக்கப்படுபவர்ஆனார். ஏறக்குறையஇலக்கியத்திருவுரு வாகவே புகழப்பட்டார். இந்த நட்சத்திர மதிப்பு அவருக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் உதவின. அவரது கதைகள் புது வாசகர்களை எட்டவும் அதன் வாயிலாக அவர் முன்வைத்த பெண்ணுலகு விரிந்த பார்வைக்குச் செல்லவும் உதவியது. eeeஎதிர்மறையாகக் கடும் அவதூறுகளுக்கும் பழிதூற்றல் களுக்கும் அவரை இலக்கு ஆக்கியது. ‘என் கதை’ வெளிவந்த காலம் முதல் மரணம்வரை – அதீதமான பாராட்டு, கேவலமான தூஷணை என்ற இரட்டை நிலை தொடர்ந்தது. மாதவிக்குட்டி அவ்வப்போது இதனால் பாதிக்கப்பட்டார். எனினும் ஒருபோதும் தளர்ந்து விடவில்லை. தனது நம்பிக்கைகளில் உறுதியாக நின்றார். படைப்பு எழுச்சி குன்றாமல் பார்த்துக் கொண்டார். நேர்ப் பேச்சில் இதைச் சொன்னபோது அவர் சொன்ன பதில் ‘ அக்கினி பர்வதத்தை ஈரத் துவாலையால் மூட முடியாது’.
மாதவிக்குட்டியின் வருகையின் மூலமே மலையாளப் புனைகதைகளில் பெண்ணுலகின் அழுத்தமும் ஆழமுமான சித்திரங்கள் துலங்கின. பெண்ணை அவளுடைய சுயத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களாகச் சித்தரிக்கும் இந்த இயல்பை அவர் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த லலிதாம்பிகா அந்தர்ஜனத்திடமிருந்தும் கே.சரஸ்வதியம்மாவிடமிருந்தும் மறைமுகமாக பெற்றிருக்கலாம். நம்பூதிரிப் பெண்களின் ஒடுக்குமுறையை எழுதியவர் லலிதாம்பிகா. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சரஸ்வதியம்மா நடுத்தர வர்க்கப் பெண்களின் நிலையை வெளிப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாகவே மாதவிக்குட்டியின் கதைகளைச் சொல்ல முடியும். முன்னவர்கள் இருவரும் பெண்ணின் இருப்பையும் வேட்கையையும் வெளிக்காட்டியபோது மாதவிக் குட்டி இந்த இரண்டுடன் அவளது கலகத்தையும் திறந்து காட்டினார். லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் பெண்ணுலகம் நம்பூதிரிப் பெண்களின் தறாவாட்டுச் சிறையில் ஒதுங்கியதாகச் சொல்லப்பட்டது. சரஸ்வதியம்மா வின் பெண்சார்பு எழுத்துக்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாயின. அந்த விமர்சனத்தால் கசந்துபோய் இலக்கியத்துறையை விட்டே விலகினார். வெளி உலகுக்குத் தெரியாமலே வாழ்ந்து மறைந்தார். தன் மீதான விமர்சனங்களைக் கண்டு நொந்துபோன சரஸ்வதியம்மா ஒரு கட்டத்தில் இப்படிச் சொன்னார்: ‘என்ன உலகம் இது? என்ன கேடுகெட்ட காரியத்தையும் செய்யலாம். ஆனால் அதைப் பற்றிச் சொல்லமட்டும் கூடாது என்று ஆட்கள் நினைக்கிறார்கள்’. அந்த நினைப்புக்கு எதிரான கலகமே மாதவிக்குட்டியின் எழுத்து.அந்த எழுத்தில் அவர் கடைபிடித்த அச்சமற்ற நிலைப்பாட்டின் சாட்சியமே ’என் கதை’.
’என் கதை’யில் முன்வைக்கும் விஷயங்களையே மாதவிக்குட்டி அதற்கு முந்தைய சிறுகதைகளிலும் கையாண்டிருந்தார். அவை கதைகள் என்பதால் பூடகமாச் சொல்லப்பட்டிருந்தன. அவருடைய தனி வாழ்க்கை அனுபவங் களைக் கதாபாத்திரங்களுக்கு அளித்து எழுதப்பட்ட கதைகள் அவை. ’ என் கதை’ யில் அவரே பாத்திரம். அவரது வாழ்க்கையே களம். அதில் தன்னை, தனது உலகை, தனக்கு நேர்ந்த அனுபவங்களை, தனது உணர்ச்சிகளை, தனது குமுறலை அப்பட்டமாகக் காட்டினார். அதிலிருந்த வெளிப்படையான தனமையும் சுதந்திர உணர்வுமே அதிர்ச்சியை அளித்தன. ஒரு பெண் இப்படி எழுதலாமா என்று கொந்தளிக்கச் செய்தன. வாசிப்புப் பழக்கமுள்ள மலையாளிகள் நடுவே ’நாலப்பாட்டுத் தறவாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்படி எழுதலாமா?’என்ற கேள்வியை ‘என் கதை’ எழுப்பியது.
சாத்வீகக் கவிஞரான பாலாமணியம்மாவின் மகள். பெருமை மிக்க நாளிதழான மாத்ருபூமியின் நிர்வாக இயக்குநரான வி.எம். நாயரின் மகள். இலக்கிய ஆளுமையான நாலப்பாட்டு நாராயணமேனனின் மருமகள். இத்தனை தறவாட்டு மகிமை கொண்ட ஒருத்தி இத்தனை பகிரங்கமாகவா எழுதுவாள்? என்று உறவினர்களிடையே ஆற்றாமை. அந்தக் காலகட்டத்தில் மலையாளிகளின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட நாலப்பாட்டு தறவாட்டில் எழுந்த புகார் பெரும்பான்மையான கலாச்சாரக் காவலர்களிடமும் எதிரொலித்தது. ‘என் உறவினர்கள் தர்மசங்கடப்பட்டார்கள்.மகிமை நிறைந்த என் குடும்பத்தின் பெயருக்குக் களங்கம் கற்பித்து விட்டதாகக் குற்றம்சாட்டினார்கள்.எனக்குப் பிரியமான அநேக விஷயங்களை நான் இழக்க இந்தப் புத்தகம் காரணமாக இருந்தது. ஆனால் ஒரு நொடி கூட அதை எழுதியது பற்றி நான் வருந்தவில்லை’என்று மாதவிக்குட்டி குறிப்பிட்டார்.
இலக்கிய, கலாச்சாரச் சூழலில் கொந்தளிப்பையும் இதழ் விற்பனையில் பரபரப்பையும் ஏற்படுத்திய ‘என் கதை’யின் வாராந்திர வெளியீடு பாதியில் நின்றுவிட்டது ஒரு முரண். சன்மார்க்கர்களின் வற்புறுத்தலாலும் இலக்கியத் துக்குப் புறம்பான செயலாலும் மாதவிக்குட்டி தொடரைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். இந்த நடவடிக்கை அவரை மேலும் பழிச் சொல்லுக்கு ஆளாக்கியது. அவரை எழுதச் செய்து விற்பனையை அதிகரித்துக் கொண்ட மலையாளநாடுஇதழ், அவரைப் பழிவாங்குவதற்காக வேறு உத்தியைக் கையாண்டது. நாவலாசிரியர் பம்மனின் கதையைத் தொடராக வெளியிட்ட்து. ‘பிராந்து’ (பைத்தியம்)என்ற அந்தக் கதையின் நாயகியாக மாதவிக்குட்டியை மறைமுகமாகச் சித்தரித்தது. ‘என் கதை’யில் அவர் பட்டவர்த்தனமாகஎழுதியவற்றுக்கு பம்மனின் நாவல் மலிவான வியாக்கியானங்களைக் கொடுத்தது. முதலில் ஆத்திரமடைந்து வழக்குத் தொடர்வதாக நோட்டீஸ் அனுப்பிய மாதவிக்குட்டி பின்னர் பெருந்தன்மையுடன் விலகினார். அவர் சொன்ன விளக்கத்தைக் கேட்டபோது அவரது குறும்பு விளங்கியது. ‘ என் கதை மலையாளத்தில் இருக்கிறவரைக்கும் பம்மனின் சரக்கும் இருக்கும். ஆனால் அதை எப்படிச் சொல்வார்கள்?பஷீரின் பால்யகால சகி, மாதவிக் குட்டியின் ’என் கதை’ என்று சொல்வதுபோலச் சொல்ல முடியுமா?பம்மனின் பிராந்து என்றுதானே சொல்லப்படும்’ என்றார்.
’என் கதை’ தொடர் நிறுத்தப்படுவதற்கு சற்று முன்போ அல்லது நின்ற உடனேயோ கமலா தாஸ் அதை ’மை ஸ்டோரி’யாக ஆங்கிலத்திலும் எழுதினார். எழுபதுகளில் வெளிவந்து கொண்டிருந்த ’தி கரண்ட்’ வார இதழில் தொடராக வெளியிடப்பட்டது. முன்னமே ஆங்கிலக் கவிஞராக அறியப் பட்டிருந்த கமலா தாஸை மேலும் பிரபலமாக்கியது. அன்று பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்த ’தி பிளிட்ஸ்’ இதழுடன் போட்டியிட ’கரண்ட்’ இதழுக்கு ‘மை ஸ்டோரி’ பெரிதும் உதவியது. பிளிட்ஸ் இதழின் முக்கியப் பத்தியாக அதன் கடைசிப் பக்கத்தில் பிரபல ஆங்கில நாவலாசிரியரும் திரைக்கதையாளருமான கே.ஏ.அப்பாஸின் ’கடைசிப் பக்கம்’வெளிவந்து கொண்டிருந்த்து. கமலா தாஸின் தொடர் அதை எதிர்கொண்டது. சில வாரங்களில் கரண்ட் இதழ் விற்பனையில் ‘பிளிட்ஸ்’ஐ மிஞ்சியது. ’என் கதை’க்காக மலையாளத்தில் கேட்டதை விட அதிகமான வசவுகளை ’மை ஸ்டோரி’ ஆங்கிலத்தில் வாங்கிக் கொடுத்த்து. ஆங்கிலம் பேசினாலும் மலையாளத்தில் பேசினாலும் மரபான இந்திய மனம் ஒரே மாதிரித்தான் இருந்தது’இவை கமலா தாஸின் வாசகங்கள்.
இந்த வாசகங்கள் சரியானவைதாம். ஏனெனில் கமலா தாஸ் சம கால மதிப்பீடுகளுக்கு நேர் முரணாகத் தன்னை உருவாக்கிக் கொண்ட படைப்பாளி. அதற்கு ‘என் கதை’ எடுத்துக் காட்டு. ஒரு படைப்பாளி தனது கலைக்காகவும் ஒரு பெண் தனது இருப்புக்காகவும் தன்னையே ஆகுதி ஆக்கிய செயலுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல கமலா தாஸுக்கு நிகரான இன்னொரு ஆளுமை இல்லை என்றே தோன்றுகிறது. கலாச்சாரமும் ஒழுக்க நெறிகளும் பெண்மீது சுமத்திய எல்லாவற்றையும் அவர் ‘என் கதை’யில் கேள்விக்குரியவை யாக்கினார். பெண்ணின் இருப்பும் மனமும் அவளது வேட்கைகளும் கனவுகளும் என்னவென்று பகிரங்கப் படுத்தினார். அதுவரை பெண்ணின் இருப்பும் மனமும் மட்டுமே பேசப்பட்ட இலக்கியச் சூழலில் பெண்ணின் உடலையும் அதன் சஞ்சார வேட்கைகளையும் வெளியரங்க மாக்கினார். காதலுக்கும் காமத்துக்கும் புதிய விளக்கங்களை நிர்மாணம் செய்தார். உறவுகளின் பாசாங்கை திரை விலக்கிக் காட்டினார். அதற்குத் தன்னையே பலியிடவும் செய்தார். உறவுமுறையின் பெயரால் பதினைந்து வயதுக் கமலாவை அவரை விடப் பல வருடங்கள் மூத்தவரான மாதவ தாஸுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். தனது முதலிரவை ‘தோல்வியுற்ற வன்புணர்ச்சி’ என்றே அவரால் காண முடிகிறது. அது ஒரு சாட்சியம் என்றே தோன்றுகிறது. ஆண்மைய அமைப்பு பெண்ணின் உடலையும் உணர்வையும் நுகர் பண்டமாகவே கருதும் நிலைக்கு எதிரான சாட்சியம்.உடலால் அடிமைப் படுத்தப்பட்ட பெண் உடலையும் இருப்பையும் ஆன்மீகமான தேடலையும் இழக்க நேர்கிறது என்பதை அழுத்தமாகச் சொன்ன சாட்சியம். சரியான பார்வையில் ’என் கதை’யில் தொனிப்பது பெண்ணின் ஒப்புக் கொள்ளல் அல்ல; மாறாக தன்னைச் சிறை வைத்திருக்கும் சமூக, கலாச்சார, மத, ஒழுக்க நெறிகளைப் பற்றிய சாட்சியமே கமலா தாஸின் எழுத்தில் தொனிக்கிறது. பிற ஆடவருடனான காதல், ஓரின விழைவுஆகியவற்றையும் இதே தொனியிலேயே ‘என் கதை’ முன்வைக்கிறது. இந்த நூலின் மிக நுட்பமான வலுவும் இன்றும் இதை சமகாலப் பொருத்தப்பாடு கொண்டதாக நிலைநிறுத்துவதும் இதுவே.அரிதாக நூலின் பக்கங்களில் புலப்படும் இறைஞ்சலும் சூழலைப் பற்றிய அழுத்தமான சாட்சியமாகவே உருப் பெறுகிறது. இழப்புகள், தனிமை, சமூக்க் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் நடுவிலிருந்து அன்பையும் மகிழ்ச்சியையும் தேடும் பெண்மையையே ‘என் கதை’ வெளிப்படுத்துகிறது. எல்லாத் தடைகளையும் கடந்து, விரிந்த வெளியுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் கருவியாகவே கமலா தாஸ் எழுத்தைக் காண்கிறார். அதனாலேயே தன்னை நேர்மையுடன் வெளிப் படுத்தவும் செய்கிறார். வேறு எந்த மதிப்பீட்டை விடவும் முற்றான அன்பை விரும்பும் பெண்ணுக்கு அது மறுக்கப்படும் நிலையே ’என் கதை’யில் சொல்லப்படுகிறது.
ஆங்கிலத்தில் ’என் கதை’ வெளிவந்து கொண்டிருந்த அதே கால அளவில் தமிழிலும் அதன் மொழிபெயர்ப்பு வெளிவந்தது. ஹேமா ஆனந்ததீர்த்தன் மொழிபெயர்ப்பில் குமுதம்இதழில் தொடராக வெளியிடப்பட்டது. நூல்வடிவில் மலையாளத்தில் 1973லும் ஆங்கிலத்தில் 1976லும் வெளியாயின. ‘என் கதை’யின் மும்மொழி வடிவங்களையும் ஒப்பிட்டு வாசிப்பது அன்று உற்சாகமூட்டும் விளையாட்டாக இருந்தது எனக்கு. தமிழ் மொழிபெயர்ப்பு வெகுஜன வாசகர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் வகையில் செய்யப்பட்டிருந்தது. படிமங்களும் உருவகங்களும் இலக்கிய விளக்கங்களும் கவித்துவமும் கொண்ட மூலப் பிரதி கிளுகிளுப்பூட்டும் எழுத்தாகக் குறுக்கப்பட்டிருந்தது. தமிழ் வாசகர்களின் ’கற்பு’க்கு ஊறு நேர்ந்திடாத வகையில் சொற்கள் இடக்கரடக்கலுடன் பயன்படுத்தப் பட்டிருந்தன.
ஒரு எழுத்தாளரே தன் சுயசரிதையை இரு மொழிகளில் வெவ்வேறாக எழுதியிருக்கிறார் என்ற புகழை அல்லது நிந்தனையைப் பெற்ற நூல் கமலா தாஸின் தன் வரலாறாகவே இருக்கக் கூடும். ’என்டெ கதை’யின் விரிவு என்று ‘மை ஸ்டோரி’யைச் சொல்ல வேண்டும். பக்க அளவிலும் விளக்கங்களிலும் இரண்டுக்கும் வேற்றுமைகள் இருக்கின்றன. மலையாளத்தில் இருபத்தியேழு அத்தியாயங்களில் இரு நூறு பக்கங்களில் எழுதப்பட்ட வரலாறு ஆங்கிலத்தில் ஐம்பத்துச் சொச்சம் அத்தியாயங்களுடன் முந்நூறு பக்கங்களாக விரிவடைந்திருக்கிறது. இரு மொழியிலும் உள்ள வாசகர்களை முன்வைத்து இது நிகழ்ந்திருக்கலாம். மலையாள வாசகருக்கு ‘நாலப்பாட்டுத் தறவாடு’ என்று கேட்டதும் விரியும் மனக் காட்சி ஆங்கில வாசகருக்குச் சாத்தியமில்லை. அவர்களது புரிந்துகொள்ளலுக்கு உதவியாகப் பல அத்தியாயங்கள் விரித்து எழுதிச் சேர்க்கப்பட்டன. சில அத்தியாயங்கள் நீக்கப்பட்டன. இன்னொரு பக்கம் மலையாளத்தில் எழுதப்பட்ட பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் அதே பகுதிகள் ஆங்கிலத்தில் சர்வ சுதந்திரத் துடனும் எழுதப்பட்டிருக்கின்றன. மலையாளத்தில் தென்பட்ட ஒளிபுகாக் காட்சிகள் ஒளி அநாயாசமாக ஊடுருவித் துலங்கின ஆங்கிலத்தில்.இந்த மாற்றத்தை இப்படிச் சொல்லலாம்: மலையாளத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் இடம்பெறச் செய்யவில்லை. அல்லது ஆங்கிலத்தில் எழுத விருந்ததை மலையாளத்துக்குக் கொண்டுவரவில்லை. இது நாவலுக்குப் பொருந்தும்; சுய சரிதைக்குப் பொருந்துமா? என்ற கேள்விக்குக் கமலா தாஸ் கேட்ட மறு கேள்வி யோசிக்க வைத்தது. ‘ ஏன் கூடாது? இது என்னுடைய கதைதானே, நடந்த உண்மைகளை நான் சொல்லியிருக்கிறேன். அதே போல நடந்திருக்க வேண்டிய உண்மைகளையும் நானேதானே சொல்லியிருக்கிறேன்? என்னுடைய உண்மையைபோலவே நான் சொன்ன பொய்களும் உண்மையானவை. அப்படிப் பொய் சொல்ல வைத்தது நானில்லையே? ’
’என் கதை’ எழுதப்பட்டு சுமார் நாற்பது ஆண்டுகளைக் கடந்த பின்னர் அதை ஓர் இலக்கியப் பிரதியாக முன்வைக்கும் இந்தத் தமிழாக்கம் வெளிவருகிறது. நண்பர் நிர்மால்யாவின் தமிழாக்கப் பிரதியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது மேற்சொன்ன எண்ணங்கள் திரண்டு வந்தன.அந்தச் செயல், எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. ‘என் கதை’தொடர்பாக இவ்வளவு சங்கதிகள் மனதுக்குள்ளே மறைந்திருந்தனவா? என்ற வியப்பு. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கேள்விகளை எழுப்பக் கூடிய, வாசிப்பில் புதுமை குன்றாத பிரதியாக இருப்பது குறித்த மகிழ்ச்சி.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு மேற்கொள்ளும் நம்பிக்கைக்குரிய சிலரில் ஒருவர் நிர்மால்யா. நவீன மலையாள இலக்கியத்தின் முக்கியப் படைப்புகள் சிலவற்றை நேர்த்தியாகவும் உண்மை யுணர்வுடனும் தமிழாக்கம் செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பைச் சடங்காக அல்லாமல் விருப்பத்துடன் செய்திருக்கிறார் என்பதற்குச் சில உதாரணங் களைச் சொல்லலாம். சாரா ஜோசப்பின் ‘ஆலாஹாவின் பெண் மக்கள்’,கோவிலனின் ’தட்டகம், எம்.சுகுமாரனின் ‘சிவப்புச் சின்னங்கள்’ கமலா தாஸின் ‘சந்தன மரங்கள்’ ஆகிய புனைவெழுத்துகளையும் வைக்கம் முகம்மது பஷீரைப் பற்றி எம்.கே.சானு எழுதிய ‘பஷீர் – தனிமையில் பயணிக்கும் துறவி’என்ற திறனாய்வு நூலையும் இந்த உதாரண வரிசையில் சேர்க்க விரும்புகிறேன். ’என் கதை’மொழிபெயர்ப்பு அந்த வரிசையை மேலும் மதிப்புள்ளதாக்குகிறது.
திருவனந்தபுரம் சுகுமாரன்
1 மே2016